Friday, July 18, 2008

இந்தியாவில் மருத்துவம் முடிக்கும் 70 சதவீதத்தினர் அமெரிக்கா செல்வது கவலை அளிக்கிறது-நடுவண் அமைச்சர் அன்புமணி

சண்டீகர் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பேசிய நடுவண் அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி பேசியது:

தாய் நாட்டிலேயே ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. 2.50 லட்சம் வெளிநாட்டு நோயாளிகள் இந்தியாவில் மருத்துவம் பெற வருகின்றனர். மருத்துவத் துறை தற்போது சிறந்து விளங்கி வருகிறது.

அதனால், வெளிநாட்டுப் பணியை மருத்துவர்கள் தேட வேண்டாம். தாய் நாட்டிலேயே சேவை செய்திட அர்ப்பணியுங்கள். இந்தியாவில் மருத்துவம் முடிக்கும் 70 சதவீதத்தினர் அமெரிக்கா செல்வது கவலை அளிக்கிறது என்றார்.

நன்றி: தினமணி

No comments: