Tuesday, December 30, 2008

பெரும் சுமையில் இருந்து ஒரு சிறு துரும்பை எடுத்து வீசி எறிவது போல

"சட்டத்தால் ஒழியுமா சாராயம்?' என்ற தலைப்பில் வெளியான (தினமணி 13-2-08) எனது கட்டுரை எண்ணிறந்த எதிர்வினைகளை எதிர்கொண்ட ஒன்று. அண்மையில் மதுவிலக்கை தமிழ்நாட்டில் எதிர்வரும் தைத் திங்கள் முதல் நாள் தொடங்கி அமல்படுத்த வேண்டும் என்று சமயங்கள் பலவற்றைச் சார்ந்த பெரியவர்கள் பலரும், டாக்டர் ராமதாஸ் முன்முயற்சியில் தமிழக முதலமைச்சரைச் சந்தித்துக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒட்டகத்தின் முதுகில் ஏற்றிய பெரும் சுமையில் இருந்து ஒரு சிறு துரும்பை எடுத்து வீசி எறிவது போல, தமிழக அரசு மதுபான விற்பனைக் கடைகளின் இயங்கும் நேரத்தை ஒரு மணி குறைத்து அறிவித்துள்ளது.

மதுவிலக்கு என்பது ஒரு மாநிலத்தில் மட்டுமே செயல்படுத்தக்கூடியது அல்ல; இதற்கான கொள்கை தேசிய அளவில் உருவாக்கப்பெற்று செயல்வடிவம் தரப்பட வேண்டும் என்பது தமிழக அரசுத்தரப்பில் முன்வைக்கப்படுகிற வாதமாகச் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே, தமிழ்நாட்டில் மதுவிலக்கைத் தளர்த்தியும், மீண்டும் செயல்படுத்தியும், மறுபடியும் விலக்கிக் கொண்டும் முடிவுகள் எடுக்கப்பட்ட போதெல்லாம் பிரபலமாக முன்நிறுத்தப்பட்ட ஒருவாதம் "சுற்றிலும் எரியும் நெருப்பு வளையத்திற்குள் கற்பூரமாகத் தமிழ்நாடு இருக்க இயலாது' என்பதுதான். இதை முற்றிலுமாகப் புறந்தள்ள முடியாது.

சட்டப்படி மதுவிலக்கு பூரணமாக நீடித்து அமலாக்கப்பட்டு வருவதாகச் சொல்லப்படும் குஜராத் மாநிலத்தில் எத்தகைய கேலிக்கூத்தான நிலைமை நிலவுகிறது என்பதை மீண்டும் சுட்டிக்காட்டத் தேவையில்லை. தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலில் இருந்த காலகட்டங்களில் புதுச்சேரிக்கும், காரைக்காலுக்கும், சத்தியவேடுக்கும் படையெடுத்த "போதை சுற்றுலா'ப் பயணிகளின் எண்ணிக்கையே மலைப்பைத் தருவதாக இருந்ததுண்டு.

கர்நாடக மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலையொட்டி அங்கே மடைதிறந்து பாய்ந்த மதுவெள்ளம், ஒசூரில் விஷச்சாராயச் சாவுகளுக்குக் காரணமாக அமைந்தது என்பதும் அண்மைக்கால நிகழ்வு.

சென்னையில் ஐ.ஐ.டி. தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் மதுபான இரவு விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டபோது, ஒரு கல்வி நிறுவன வளாகத்தில் இதை அனுமதிக்கலாகாது என்று எதிர்க்குரல் எழும்பியது. இந்த எதிர்ப்புக்கு "மதிப்பு' அளித்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், அதில் கலந்துகொண்ட கல்வியாளர்களை நந்தம்பாக்கத்தில் அமையப் பெற்றுள்ள சென்னை வர்த்தக மைய வளாகத்துக்கு சொகுசுப் பேருந்துகளில் அழைத்துச் சென்று விருந்து உபசாரத்தைக் குறையொன்றும் இல்லாமல் நடத்தி முடித்தனர்.

அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருந்தினர்களில் பலர் வெளிநாட்டவர் என்பதால் ஐ.ஐ.டி. வளாகத்தில் நடக்கவிருந்த இந்த விருந்தை எதிர்த்துக் குரல்கள் எழுந்ததையே, தமிழ்நாட்டின் விருந்தோம்பல் பண்பாட்டிற்கு முரணான ஒன்றாக ஆங்கில நாளேடு ஒன்று சித்திரித்தது என்பதும் நினைவில் நிறுத்தற்பாலது.

இன்றைய உலகமய, தாராளமயச் சூழலில் நாட்டைச் சீரழித்து வரும் நுகர்வுக் கலாசாரத்தின் தாக்குதலின் ஒரு பரிமாணம்தான் நாட்டில் பெருகி வரும் குடிப்பழக்கம். சிகரெட், பீடியை கூட சிறுவர்களுக்கு விற்பது சட்டவிரோதம் ஆக்கப்பட்டுள்ளது. ஆனால், டாஸ்மாக் கடைகளின் வாயிலில் நிற்கும் சிறுவர்களுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் மது விற்பனை செய்யப்படும் காட்சி வேதனையளிக்கிற ஒன்று. மதுபானக் கடைகளையொட்டி அமையப்பெற்றுள்ள மதுக்கூட "பார்கள்' திறந்தவெளிக் குடியை ஊக்குவிப்பனவாகச் செயல்படுகின்றன.

நட்சத்திர உணவு விடுதிகளில் மட்டுமே அனுமதிக்கப்பெற்ற பார்களில் மது அருந்துவது கூடுதல் செலவு செய்தால் மட்டுமே சாத்தியம் என்பதால் ஓரளவு வசதி படைத்தவர்கள் மட்டுமே அவற்றில் சுவையும், சுகமும் அனுபவிக்க இயலும். ஆனால் அரசு அனுமதி பெற்ற பார்களில் மதுபாட்டில்களுக்கான விலையோடு, ஒரு ரூபாய்க்கு வாங்க முடிகின்ற ஊறுகாயை வைத்தே குடித்து முடிக்கிற போதையர்களாகப் பலரும், பழகி அனுபவிக்க முடிகிறது.

குடிப்பழக்கத்தை முகச்சுளிப்பில்லாமல் ஏற்று அனுமதிக்கிற குடும்பங்களின் எண்ணிக்கை, அதிர்ஷ்டவசமாக மிகவும் குறைவானதே. எனவே மது பாட்டிலை வாங்கிச் சென்று வீட்டில் குடிப்பதற்கு அஞ்சுகின்ற அல்லது தயக்கம் காட்ட நேரிடுகின்ற ஒரு பெரும் பகுதி குடிகாரர்களுக்கு இந்த பார்கள்தான் அபயக்குரல் கொடுத்து அழைப்பு விடுக்கின்றன.

இவையெல்லாம் மது அரக்கனின் விஸ்வரூப தாண்டவத்தை இன்றுள்ள நிலையிலேயே தொடர்ந்து அனுமதிப்பது எத்தகைய பெரும் சமூகக்கேடு. இளைய தலைமுறையைச் சீரழிக்கும் இந்தக் கொடுமையை எவ்வாறு சந்திக்கப் போகிறோம் என்கிற சவாலை நம் முன் நிறுத்துகின்றன.

மதுவிலக்கு தொடர்பான தேசியக் கொள்கை உருவாகி, அது படிப்படியாகச் செயல்படுத்தப்பட்டு விடுவதற்கான வாய்ப்போ, காலமோ கனிந்து வந்துள்ளதாக நம்புவது மடமையே அன்றி வேறல்ல. எனவே மதுவைப் பூரணமாக விலக்க இயலாதெனினும், மது அரக்கனை சற்றே விலங்கிட்டு வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசர அவசியமாகும். தமிழக அரசு இந்தத் திசையில் சிந்தித்துச் செயல்படத் தொடங்கினால் நல்லது.

முதலாவதாக, சேர்ந்து குடிக்கும் பெருந்திரள் மதுக்கூடங்களாகத் திகழும் திறந்தவெளி அரசு அனுமதி பெற்ற பார்களை ரத்து செய்வது பற்றி மாநில அரசு யோசிக்க வேண்டும்.

மதுபானக் கடைகளையொட்டி இத்தகைய "பார்'களை அனுமதிக்கிற முடிவு அறிவிக்கப்பட்டபோது, இன்றைய தமிழக முதலமைச்சர் முரசொலியில் எழுதிய "பார்' கவிதையை அவரே மீண்டும் ஒருமுறை படித்துப் பார்ப்பாரேயானால் இந்த பார்களுக்கான அரசு அனுமதியை நீக்குவதற்கான காரண காரியம் பளிச்செனப் புலப்படும்.

இது ஒருவேளை டாஸ்மாக் விற்பனையில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தாமல்கூடப் போகலாம். ஆனால் பார்கள் தடைசெய்யப்படுவது, பெற்றோருக்கும், குடும்பத்தாருக்கும் தெரியாமல் குடிக்கிற ஒரு பகுதியினரை - குறிப்பாக இளைய தலைமுறையினரில் கணிசமானவர்களை - குடிப்பழக்கத்தில் இருந்து மீட்க உதவி செய்யும்.

இரண்டாவதாக, டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை கணிசமாகக் குறைக்கலாம். இந்தியாவிலேயே பல மாநிலங்களில் மது விற்பனை நேரத்திற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. காலை 10 மணிக்கே மதுபானக் கடைகள் திறந்து வைக்கப்படுவது, இரவு குடித்து முடித்த போதை தெளிந்த உடனேயே மீண்டும் போதை ஏற்றிக்கொள்ள வகை செய்கிற ஏற்பாடாகவே அமைந்துவிடுகிறது. ஊரறியக் குடிப்பவர்கள் மாலை மயங்கி இரவு நெருங்குகிறபோது மதுபானக் கடையை நோக்கி நடையைக் கட்டுவார்கள்.

ஆனால் ஒளிவு மறைவாகக் குடிப்பவர்கள்தான் கடைகளில் கூட்டம் அதிகம் இல்லாத - யாரேனும் பார்த்துவிடுவார்களோ என்ற அச்சம் குறைவாக எழும் - காலை நேரத்தில் இந்தக் கடைகளை வட்டமிடுகிறார்கள். ஒரு நாளைக்கு எட்டு மணி நேர வேலை என்கிற சர்வதேசக் கோட்பாடு டாஸ்மாக் விற்பனையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு மட்டும் 10 மணி நேரம் என்றிருக்க வேண்டியதில்லையே!

மூன்றாவதாக, மதுபானக் கடைகளின் எண்ணிக்கையை இனிக் கூட்டுவதில்லை என்கிற முடிவைத் தொடர்ந்து, தற்போது இயங்கும் கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது பற்றியும் அரசு யோசிக்க வேண்டும். ஊர்நடுவே, பள்ளிக்கூடம் அல்லது வழிபாட்டுத்தலங்களுக்கு அருகில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும் என்று மக்கள் நேரடி நடவடிக்கைகளில் இறங்குகிறபோது மட்டுமே அரசு நிர்வாகம் இதைப்பற்றிக் கவனம் செலுத்துகிறது.

மாறாக, மாவட்டந்தோறும் தற்போது உள்ள கடைகளின் எண்ணிக்கையையும், அவை அமைந்துள்ள இடங்களின் பொருத்தப்பாடு பற்றியும் மாவட்ட நிர்வாகமே முன்கையெடுத்துப் பரிசீலனை செய்து இந்தத் திசையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

நான்காவதாக, வருடம் முழுவதும் - காந்தி, மகாவீரர் பிறந்த நாள்கள் போன்ற அரிதான விதிவிலக்குகளைத் தவிர்த்து - தொடர்ந்து இயங்க வேண்டிய இடையீடற்ற நடப்பாக மதுபான விற்பனை நடப்பது அவசியம்தானா என்பதையும் மாநில அரசு பரிசீலிக்க வேண்டும்.

பல மாநிலங்களில் - முன்னர் ஒரு கட்டத்தில் தமிழ்நாட்டிலும் கூட - மாதாந்திர சம்பள தினங்களான முதல் தேதி, 10-ம் தேதிகளில் மதுக்கடைகள் மூடப்படுவதுண்டு. சில மாநிலங்களில் வாரம் ஒரு நாள் விற்பனை நிறுத்தப்பட்டதும் கடந்த கால நடைமுறை. வாரம் ஒரு நாள் விடுமுறை என்பது டாஸ்மாக் ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டிய ஒன்று என்ற நோக்கிலும் இதைக் கவனிக்கலாம்.

முறைசாராத் தொழிலாளர்கள் வாரக்கூலி பெறுகின்ற சனிக்கிழமைகளில் மதுக்கடைகளை மூடுவது அந்தக் குடும்பங்களின் பெண்களுக்கு மிகப்பெரிய நிம்மதிப் பெருமூச்சைத் தரும் என்பது திடமான உண்மை. தேர்தல் காலங்களில் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை நாள்களையொட்டி மதுக்கடைகள் மூடப்படுவது தேர்தல் ஆணையம் கையாளுகிற நடவடிக்கையாக உள்ளது.

விடுமுறை விடப்பட்டாலும், குடிபோதைக்கு அடிமையானவர்கள் முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்வார்கள் என்பதை மறுக்க முடியாது. எனினும் வருடத்திற்கு 52 நாள்களாவது மது விற்பனை நடைபெறாமல் இருப்பது, "படிப்படியாக' என்பதை அர்த்தமுள்ளதாக ஆக்குமல்லவா?

ஐந்தாவதாக - அதி முக்கியமானதாக - மாநில அரசு குடிப்பழக்கத்திற்கு எதிரான பிரசாரத்தை ஓர் இயக்கமாகவே மேற்கொள்ள வேண்டும். இதற்கென்று கணிசமான நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

மகளிர் சுய உதவிக்குழுக்கள், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் போன்றவை இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டால், மது அரக்கனுக்கு எதிரான ஒரு கருத்துப் போரைப் பயனுள்ள விதத்தில் நடத்த இயலும். குடிபோதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்டு எடுப்பதற்கான சிகிச்சை மையங்கள் மாநிலம் முழுவதும் உள்ள பொது - தனியார் மருத்துவமனைகளால் இலவசமாக நடத்தப்படவும் அரசு ஏற்பாடு செய்யலாம்.

இந்த வரிசையில் இன்னும் பலவற்றைச் சொல்லலாம்; எனினும் தொடக்கமாக இவற்றைத் தொட்டுப் பார்க்கலாமே!

புதிய ஆண்டு பிறக்கப் போகிறது. ஏற்கெனவே புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கான தயாரிப்புகள் நட்சத்திர விடுதிகளையும், பண்ணை வீடுகளையும் மையமாக வைத்து மேற்கொள்ளப்பட்டு விட்டதாகச் செய்திகள் வந்துள்ளன.

இந்தப் புத்தாண்டின் வரவை மதுபானம் தரும் உற்சாகத்தோடு கொண்டாடுவது என்பதுதான் உலகமயக் கலாசாரம். நம் சமூகத்தில் புகுத்தி உள்ள இழிவு. இந்தத் தருணத்தில் ஏற்கெனவே நடைபெற்ற விரும்பத்தகாத நிகழ்வுகளும், உயிரிழப்பும் தொடர் கதையாகாமல் பார்த்துக் கொள்வதும் அரசு நிர்வாகம் - காவல்துறையின் பொறுப்பு!

நன்றி: தினமணி 30.12.2008

Monday, December 22, 2008

தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு: மருத்துவர் இராமதாசிடம் தமிழக முதல்வர் உறுதி

“தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த ஆயத்தமாகிறேன்“ என்று முதல்வர் கருணாநிதி உறுதியளித்ததாக பாமக நிறுவனர் இராமதாசு குறிப்பிட்டுள்ளார்.

இராமதாசு தலைமையில் கடந்த மாதம் 22-ம் தேதி நடைபெற்ற மது ஒழிப்பு மாநாட்டில் அனைத்து சமுதாயத் தலைவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று கருத்துகளைத் தெரிவித்தனர்.

கூட்டத்தின் முடிவில் தை மாதம் முதல் தேதியில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கைக் கொண்டு வர முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து வற்புறுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, இராமதாசு தலைமையில் அனைத்து சமுதாய மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பலர், முதல்வர் கருணாநிதியை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை காலை சந்தித்துப் பேசினர்.

சந்திப்புக்கு பின்னர், தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் இராமதாசு கூறியது:

மது குடிப்பவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் பெருகி வருகிறது. பள்ளி மாணவர்களும் குடிக்கும் நிலை உள்ளது. மதுவை ஒழித்தால் கள்ளச் சாராயம் பெருகும் என்ற கருத்து உள்ளது.

கள்ளச் சாராயம் இல்லாமல் பார்த்துக் கொள்வோம் என்று இங்குள்ள சமுதாயத் தலைவர்கள் உறுதி அளித்துள்ளனர். அண்டை மாநிலத்தில் மது இருக்கிறதே என்று முதல்வர் தெரிவித்தார்.

கர்நாடகத்தில் மதசார்பற்ற சனதா தள அரசின் ஆட்சிக் காலத்தில் மது ஒழிக்கப்பட்டது. தற்போதைய அரசும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த தயார் என அறிவித்துள்ளது.

பல துறைகளுக்கும் இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் திகழும் நீங்கள் (கருணாநிதி), மது விலக்கை அமல்படுத்தி நாட்டுக்கு வழிகாட்ட வேண்டும் என்று கேட்டுகொண்டோம். இதற்காக தேசியக் கொள்கை உருவாக்க வேண்டும் எனக் கூறினோம்.

எங்கள் கருத்துகளைக் கேட்ட முதல்வர், “உங்கள் உணர்வை மதிக்கிறேன். மதுவிலக்கை முழுமையாக அமல் செய்ய இயலாவிட்டாலும், படிப்படியாக அதைச் செய்ய ஆயத்தமாகிறேன்.”

என்று உறுதி அளித்துள்ளார். இதற்கு முதல்படியாக விரைவில் என்னுடன் இதுதொடர்பாக கலந்து பேசி நல்ல முடிவு எடுப்பதாகவும் முதல்வர் தெரிவித்ததாக குறிப்பிட்டார் இராமதாசு.

Monday, December 15, 2008

தமிழ் ஈழம்தான் இந்தியாவுக்கு நட்பு நாடாக இருக்கும்: இராமதாஸ்

இலங்கையில் இருந்து பிரிந்து உருவாகும் ‘தமிழ் ஈழம் தான் இந்தியாவுக்கு நட்பு நாடாக இருக்கும்‘ என்று இந்திய பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் டாக்டர் இராமதாஸ் கூறினார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் ‘தமிழ் இன மான மீட்பு இயக்கம்‘ சார்பில் இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், ஈழ தமிழர் நலனை காக்க கோரியும் உறுதிமொழி ஏற்பு முழக்க நிகழ்ச்சி சென்னையை அடுத்த மறைமலைநகரில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் இராமதாஸ் தலைமை தாங்கி பேசியதாவது:-

இது ஒரு வித்தியாசமான போராட்டம். ஈழத்தில் இன்னலுக்கு ஆளாகியுள்ள தமிழனுக்கு ஆதரவு கொடுக்க நாங்கள் இருக்கிறோம் என்று வெளிச்சத்தை காட்ட தீப் பந்தம் கையில் ஏந்தி போராட்டம் நடத்துகிறோம். எங்கள் குரலும், தமிழக மக்களின் ஒட்டுமொத்த குரலும் இலங்கையில் தமிழ் ஈழம் மலரவேண்டும் என்பதுதான். இலங்கையில் தமிழனும், சிங்களனும் சேர்ந்து வாழ முடியாது. 60 ஆண்டுகாலமாக தனி நாடு கேட்டு தமிழர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று முடிவுக்கு வரவேண்டிய சூழ்நிலையில் உள்ளது. இலங்கை இறையாண்மைக்கு குந்தகம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என இங்குள்ள சிலர் கூறுகிறார்கள்.

சொந்த நாட்டு மக்களை குண்டு போட்டு அழிப்பதும், பள்ளிக்கூடம், கோவில்கள் மீது குண்டு வீசி தாக்குவதும்தான் இறையாண்மையா? இல்லை என்று ஐ.நா.வே சொல்கிறது. சொந்த நாட்டு மக்களை கண் போல் காப்பது தான் இறையாண்மை. இலங்கையில் வாழும் தமிழனுக்கும், சிங்களவனுக்கும் உள்ள மதம், மொழி, கலாசாரம் வேறு, வேறு. அப்படியிருக்கையில், எப்படி ஒன்றாக வாழ முடியும். அதனால்தான் தனி நாடு கேட்டு போராடி வருகிறார்கள்.

இலங்கை அதிபர் ராஜபக்ச தனது வீட்டில் பாதாள அறையில் இருந்து கொண்டு, கிளிநொச்சியை நெருங்கி விட்டோம் என்று கூறி வருகிறார். இந்திய அரசுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். இந்திய அரசே, இலங்கை என்றும் நமக்கு நட்பு நாடு அல்ல, பகை நாடு தான். சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் தான் அவர்களுக்கு நட்பு நாடு. இந்த உண்மையை ஏன் இன்னும் உணரவில்லை. இதை உடனே மறுபரிசீலனை செய்யவேண்டும்.

இலங்கை வழியாக நமக்கு ஆபத்து வராது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது. சிங்களவன், நம்மளை காட்டி கொடுத்து விடுவான். எனவே, இலங்கையில் இருந்து பிரிந்து உருவாகும் தமிழ் ஈழம் தான், நமக்கு நட்பு நாடாக இருக்கும்.

1985-ம் ஆண்டு நடந்த ‘டெசோ‘ மாநாட்டில் தமிழ் ஈழமே தீர்வு என்று முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே, இலங்கை தமிழர் பிரச்சினையை முதல் கையில் எடுத்தது நாங்கள் தான் என்று மார்தட்டிக்கொள்ள தி.மு.க.வுக்கு உரிமை உள்ளது. அவர்கள் அப்போது முன்மொழிந்ததைத்தான், இப்போது நாங்கள் வழிமொழிந்து வருகிறோம். இலங்கை இராணுவத்துக்கு அழிவு நிச்சயம். எனவே, உடனடியாக ராஜபக்ச புத்தியை பயன்படுத்தி, தமிழர்களுக்கு நாட்டை திருப்பி கொடுக்க வேண்டும்.

கடந்த நவம்பர் மாதம் 29-ந் தேதி இலங்கை இராணுவம், தமிழர்கள் வாழும் பகுதியில் ‘கிளஸ்சர்‘ வகை குண்டுகளை பயன்படுத்தி தாக்கியுள்ளது. இந்த வகை குண்டுகளை பயன்படுத்தக்கூடாது என்று 2002-ம் ஆண்டு நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் ஐ.நா. தலைமையில் கூடிய 92 நாடுகள் கூட்டத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இதில், இந்தியாவும், இலங்கையும் கையெழுத்திட்டுள்ளது. ஆனால், இப்போது தடை செய்யப்பட்ட குண்டுகளை இலங்கை இராணுவம் பயன்படுத்தியுள்ளது. இது ஒன்றே போதும். இலங்கை இராணுவத்தை உலக நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிறுத்தி தண்டனை வாங்கி கொடுக்க முடியும்.

இவ்வாறு டாக்டர் இராமதாஸ் பேசினார்.

நன்றி: தமிழ்வின்.காம்

Wednesday, December 10, 2008

மரணக்குழியில் சிங்கள இராணுவம் சிக்கினால் இந்தியா அதனை அங்கீகரிக்குமா?: இராமதாஸ் கேள்வி

மரணக்குழியில் சிங்கள இராணுவம் சிக்கினால் இந்தியா அதனை அங்கீகரிக்குமா? என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கம் சார்பில் "சிங்கள அரசே போரை நிறுத்து'' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நேற்று புதன்கிழமை வீரசந்தனம் தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு மருத்துவர் இராமதாஸ் ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கை பிரச்சினை குறித்த விழிப்புணர்வை நாடெங்கும் இளைஞர்களிடமும், மாணவர்களிடமும் பரப்புரை செய்வோம். 13 ஆம் நாள் மறைமலை நகரில் கருஞ்சட்டைப் படை மான மீட்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கின்றனர். அதில் நானும் கலந்து கொள்கிறேன்.

இந்திய அரசு அங்கே நடக்கிற தமிழின அழிப்பை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்திய அரசு நினைத்தால் ஒரு நிமிடத்தில் நிறுத்த முடியும். ஆனால் இந்திய அரசு நினைக்கவில்லை. முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் அனைத்துக் கட்சி குழு டெல்லி சென்று பிரதமரிடம் பேசிய போது இதனை புரிந்து கொண்டோம். 4 ஆம் நாள் டெல்லி சென்று வலியுறுத்தினோம். 10 ஆம் நாள் ஆகிவிட்டது, இதுவரை அதற்கான ஒரு சிறு அடையாளம் கூட இல்லை.

டெல்லி சென்றோம், பேசினோம், வந்தோம். ஆனால் வென்றோமில்லை. எந்த சலனமும் இதுவரை ஏற்படவில்லை. சிறிலங்காவுக்கு வெளிவிவகார மந்திரி சென்றதாக இல்லை. இதற்கு ஒட்டுமொத்த தமிழர்களுக்கு தலைமை தாங்குகிற முதலமைச்சர் தான் பதில் சொல்ல வேண்டும். வேறு யாரை நாம் கேட்பது.

சிறிலங்கா என்றுமே இந்தியாவுக்கு ஆதரவாக இருந்ததில்லை. இருக்கப் போவதும் இல்லை. இந்தியாவுக்கு அது பகை நாடு என்பதை இந்தியா உணரவில்லை. அல்லது ஈழத் தமிழர்கள் அழிய வேண்டும் என்று நினைக்கிறார்களா? என்று தெரியவில்லை.

அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா, வங்காளதேசம் ஏன் அமெரிக்கா கூட இந்தியாவுக்கு ஒரு பிரச்சினை என்றால் இலங்கையை ஒரு தளமாக பயன்படுத்திக் கொள்ளும். அதனால் தான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மாற வேண்டும். தமிழீழத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும். அது இந்தியாவுக்கு என்றும் நட்பு நாடாக இருக்கும் என்பதை முதலமைச்சர் கருணாநிதி சொல்ல வேண்டும்.

விடுதலைப் புலிகளை வெல்ல முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். இப்போது கூட நெருங்கி விட்டோம் என்று பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மரணக்குழி அவர்களுக்கு காத்திருக்கிறது. மரணக்குழியில் சிங்கள இராணுவம் சிக்கி விட்டால் அப்போது இந்தியா அதை அங்கீகரிக்குமா? அங்கீகரிக்க வேண்டும் என்று முதலமைச்சர் கூற வேண்டும். தற்காப்புக்காக அங்கீகரிக்கலாம்.

போரை நிறுத்துவது மட்டும் தீர்வாகாது. அரசியல் தீர்வு என்பது என்ன? இன்னும் 100 ஆண்டுகளானாலும் இலங்கையில் தமிழர்களுக்கு உரிமை தரமாட்டார்கள். இந்த அங்கீகாரத்தை முதல்வர் முன்னெடுத்துச் சொல்ல, நாங்கள் பின்னாலேயே உறுதிமொழி எடுத்துச் சொல்கிறோம்.

டெல்லி சென்ற போது ஐ.நா. மூலமாக பாதுகாப்பு சபைக்கு சென்று முறையிடலாம் என்றெல்லாம் கூறினோம். பிரதமருக்கு இலங்கை பிரச்சினையில் ஆலோசனை கூற கட்சி சார்பற்ற 2 தமிழர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றேன். என்ன சொல்லியும் என்ன பிரயோசனம். ஒன்றுமே நடக்கவில்லை.

இப்போது மனித சிவில் உரிமை கழக தலைவர் வக்கீல் சுரேஷ் உலக நீதிமன்றத்தில் முறையிட அனைத்துலக குற்றவியல் சட்டத்தில் இடம் இருக்கிறது என்று கூறியுள்ளார். அதன்படி 30 நாட்களில் உலக நீதிமன்றத்தில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, சரத் பொன்சேகா ஆகியோரை நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வோம் என்றார் அவர்.

கருத்தரங்கில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், கவிஞர் மு.மேத்தா, தமிழ்த் தேசிய விடுதலை இயக்க பொது செயலாளர் தியாகு உட்பட பலர் உரையாற்றினர்.

நன்றி: புதினம்.காம்

Tuesday, December 9, 2008

விவசாய நிலங்களை மனை வணிகத்திற்கு விற்காதீர்கள்: மருத்துவர் இராமதாசு

உழவர் பேரியக்கம் சார்பில் விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடு காஞ்சிபுரம் கன்னிகாபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


இம்மாநாட்டில் மருத்துவர் இராமதாசு பேசியது:

நில மனை வணிகம் செய்பவர்கள் வந்து கேட்டால் விளை நிலங்களை விற்காதீர்கள்.

சிப்காட், சிட்கோ போன்றவற்றின் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைக்க விளைநிலங்களை அபகரிக்கின்றனர்.

விவசாய நிலங்களை கையகப்படுத்த மாட்டோம் என பேரவையில் முதல்வர் அறிவித்தார். ஆனால் அந்த உறுதிமொழியை அரசு காப்பாற்றவில்லை.

விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காததால் நிலங்களை விற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தொழில் நிறுவனங்கள் விளைநிலங்களை மீண்டும் விவசாயிகளிடமே தரும் காலம் வரும்.

வாழ்கின்ற உரிமையை இழந்து விட்ட விவசாயிகளுக்காக இம்மாநாடு நடத்தப்படுகிறது. வாழ்வதா, சாவதா என மத்திய, மாநில அரசுகளை விவசாயிகள் கேட்டு வருகின்றனர். விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்றாவிட்டால் விவசாயிகளின் புரட்சி வெடிக்கும்.

நமது நாட்டில் ஒரு மாதத்துக்கு 40 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்கவில்லை. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் கோரிக்கைகள் நிறைவேறும்.

நாட்டின் முதுகெலும்பு விவசாயம் எனக் கூறி வருகின்றனர். ஆனால் விவசாயிகள் வளைந்து வளைந்து நடக்க முடியாத நிலைக்கு ஆளாகி விட்டனர்.

நகர்ப்புறத்தில் 44 சதவீதமும், கிராமப்புறத்தில் 56 சதவீதமும் விவசாயிகள் வசிக்கின்றனர். முன்னெல்லாம் விவசாயிகள் ரூ.10 முதல் போட்டு ரூ.100 சம்பாதித்தனர். ஆனால் தற்போது ரூ.100 முதல் போட்டு ரூ.10-தான் சம்பாதிக்கின்றனர்.

விவசாயிகளின் நிலை குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை, தனி நீர்ப்பாசன கொள்கை வகுக்க வேண்டும்.

நதிகள் இணைப்பு என்பது கனவாகவே உள்ளது. இணைப்புக்கு முன்பு நதிகளை தேசியமயமாக்க வேண்டும். மாவட்ட கூட்டுறவு வங்கி மூலம் நபார்டு வங்கி நேரடியாக விவசாயிகளுக்கு கடன் தர வேண்டும்.

பாலாறு உள்பட அனைத்து ஆறுகளும் பாழடைந்து விட்டன. தடுப்பணைகள் கட்ட வேண்டும். மழைநீர் சேகரிப்பு திட்டங்களை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். இன்னும் 5 ஆண்டுகளில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.

இலவச கலர் டிவி வழங்க ரூ.2,300 கோடியை ஒதுக்கீடு செய்கின்றனர். அத்தொகையை விவசாயிகளின் நலனுக்காக செலவிடலாம்.

உரம், விதையை இலவசமாக தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு லிட்டர் பால் விலை ரூ.12 என விற்கப்படுகிறது. பால் உற்பத்தி செய்வோருக்கு லிட்டருக்கு ரூ.25 தர வேண்டும் என்றார் மருத்துவர் இராமதாசு.

நன்றி: தினமணி, தினத்தந்தி.

Monday, November 17, 2008

இலங்கைத் தமிழர்களின் விடுதலைப் போரை இந்தியா அங்கீகரிக்க வேண்டும்: இராமதாசு

இலங்கை அரசு போரை நிறுத்தவில்லையெனில், தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிப்போம் என இந்தியா அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனத் தலைவர் மருத்துவர் ச.இராமதாசு வலியுறுத்தினார்.
இதுகுறித்து வேலூரில் நிருபர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது:
போரை நிறுத்த வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை இராசபக்சே இந்தியாவுக்கே வந்து மறுத்துள்ளார். இங்கிருந்து சென்றதும் தாக்குதலை அதிகரித்துள்ளார்.
இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக சொல்ல வேண்டும். இல்லையெனில் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிப்போம் என்று இந்தியா அறிவிக்க வேண்டும்.

குறைந்தபட்சம் மனிதாபிமான அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபைக்கு இவ்விஷயத்தை எடுத்துச் சென்று, ஐ.நா தலையீட்டைக் கோரவேண்டும். இல்லையெனில் பிரச்னை தீராது. பேச்சுவார்த்தையின் மூலம் அரசியல் தீர்வு காண இலங்கையை எச்சரிக்க வேண்டும்.

இந்தியா முக்கிய முடிவு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழர்களை தீவிரவாதிகள் என்று சொல்லிக் கொண்டிருப்பதில் பயனில்லை. 52 லட்சம் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் இது என்ற கருத்துக்கு இந்தியா வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் தீவிரவாதம் தலைதூக்கியுள்ளது. எங்கேயும் முப்படைத் தாக்குதல் நடைபெறவில்லை.

நம்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதலில் சுமார் 500 பேர் இறந்துள்ளனர். இதை இந்தியா சகித்துக் கொள்வதுபோல் வேறு எந்த நாடும் சகித்துக் கொள்ளாது.

கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாமக கலந்து கொள்ளும். முக்கியமான காலக் கட்டத்தில், சிக்கலான பிரச்னையில் இந்திய அரசின் தலையீடு அவசியம் என்ற நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மாநில அரசு கூட்ட வேண்டும். ஏற்கெனவே அரசு கூட்டியதால்தான் மத்திய அரசு கொஞ்சம் செயல்படத் தொடங்கியது.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் கூட்டி மாற்று வழியை சிந்திக்க வேண்டும். சட்டப் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஆதரித்துள்ள நிலையில் இந்த கூட்டம் கூட்டினால் சரியாக இருக்கும்.

இந்தியாவுக்கு எதிரி நாடுகளான சீனா, பாகிஸ்தான் ஆகியவை இலங்கைக்கு அதிகபட்ச ஆயுதங்களை அனுப்பி வருகின்றன. இதை அனுமதிக்க முடியாது. இது இந்தியாவுக்கு எதிரான நிலைபாடு. இலங்கைத் தமிழர்களுக்கு தனிநாடு ஏற்பட்டால் இந்தியாவுக்கு நேசநாடாகத்தான் இருக்கும் என்றார் இராமதாசு.
நன்றி தினமணி

Wednesday, October 22, 2008

2011-ல் சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.

இதுகுறித்து தில்லியில் திங்கள்கிழமை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட தேசிய கருத்தரங்கில் சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முன் வரவேண்டும். இதை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே கிரீமிலேயர் விவகாரத்தில் தெளிவான நிலை ஏற்படும் என்றும் அரசியல் கட்சிகள் கூறியுள்ளன.

கருத்தரங்கில் பங்கேற்று பா.ம.க. நிறுவனர் இராமதாசு பேசியது:

சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியும், பிற சமூக சேவை அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால், இதுகுறித்து அரசு எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பை பின்பற்றுவதன் மூலமே சமூகத்தின் முன்னேற்றம் மற்றும் வறுமை நிலை ஆகியவை குறித்து தெளிவாகத் தெரிந்து கொள்ள இயலும் என்றார் அவர்.

சமூகத்தின் பல்வேறு பிரிவினரின் மக்கள் தொகை குறித்து அறிவியல் அடிப்படையில் புள்ளிவிவரத்தை திரட்டாதவரை கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான இடஒதுக்கீட்டில் திருத்தம் கொண்டுவருதல் என்பது சாத்தியமில்லை என்று முன்னதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்ததை நினைவுகூர்ந்தார் இராமதாசு.
சாதி அடிப்படையில் கணக்கெடுப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. இதுகுறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் அவசியம். இதற்காக பாமக சார்பில் நாடுமுழுவதும் பிரசாரம் மேற்கொள்ளப்படும்.

சாதி அடிப்படையில் கணக்கெடுப்பை பின்பற்ற மத்திய அரசு தனிப்பட்ட முறையில் கூடுதல் கவனம் செலுத்துதலோ, நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமோ இல்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரத்தைக் குறித்து கொள்ள ஏற்கெனவே வடிவமைக்கப்பட்டுள்ள அட்டவணையில் கூடுதலாக ஒரு காலத்தை சேர்த்தால் மட்டும் போதுமானது என்றார் அவர்.

சமூக ஊடகங்களும் கண்களை மூடிக்கொண்டு செயல்படுகின்றன. உண்மைகளை மக்களுக்கு தெரிவிக்காமல் பாரபட்சத்துடன் நடந்து கொள்கின்றன. எனவே, ஊடகத்துறையிலும் இடஒதுக்கீடு என்பது அவசியம் என்றும் இராமதாசு வலியுறுத்தினார்.

இந்த கருத்தரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுதர்சன நாச்சியப்பன், கரண் சிங், இராம் கோபால் யாதவ், தேவேந்திர பிரசாத் யாதவ், சரத் யாதவ், தேவேந்தர் கெளட உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Monday, October 13, 2008

மதுவை நாட்டைவிட்டே விரட்ட வேண்டும்: இராமதாசு

மாவட்ட பாட்டாளி மகளிர் சங்கத்தின் 23-வது மது ஒழிப்பு மாநாடு மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அவர் பேசியது:

ஆண்களால் சாதிக்க முடியாததை பெண்களால் சாதிக்க முடியும் என்பதை எடுத்துக்காட்டுகிறது இந்த மாநாடு. பெண்கள் சக்திமிக்கவர்கள். தாயாகவும், மனைவியாகவும் இருந்து ஆண்களுக்கு சக்தியை அளிப்பவர்கள்.

"ஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலே' என்று சொல்வார்கள். ஆனால், குடியினால் அழிவது ஆண்கள்தான். குடி அரக்கனிடமிருந்து ஆண்களை பெண்களால் மட்டுமே காக்க முடியும் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

குடிகார ஆண்களால் குடும்பம் சீரழிவதைத் தடுத்து நிறுத்த இந்த மகளிர் மது ஒழிப்பு மாநாடு இங்கு நடத்தப்படுகிறது.

மதுரையில் நீண்ட காலத்துக்கு முன்பு கள்ளுக்கடை மறியல் போராட்டம் நடைபெற்ற சம்பவம் உண்டு. எனினும், தற்போதுதான் முதல்முறையாக டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி மகளிர் சங்கம் மூலம் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

இந்தக் கேடுகெட்ட மதுவை நாட்டைவிட்டே விரட்ட வேண்டும். இது எங்கள் கோரிக்கை மட்டும் அல்ல. தமிழகத்தில் உள்ள 3 கோடி பெண்களின் விருப்பமாகும். ஆண்களும் கூட மதுக்கடையை வெறுக்கத்தான் செய்கின்றனர்.

இந்தியாவில் சாலை விபத்துகள் அதிகம் நிகழும் மாநிலமாக தமிழகம் உள்ளதற்கு குடிதான் காரணம். 13 வயதிலேயே குடிக்க ஆரம்பித்து விடுகின்றனர். பள்ளி மாணவர்கள் பார்களில் குடித்துவிட்டு பிடிபடும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன.

தமிழக தெருக்களில் இரவில் 10 மணிக்கு மேல் குடிகாரர்களின் ராஜ்ஜியமாக உள்ளது. பெண்கள் கண்ணீர்தான் மது பாட்டிலில் அடைக்கப்பட்டுள்ளது. அவர்களின் கண்ணீர்க் கவலை கோட்டையில் உள்ளவர்களுக்குக் கேட்க வேண்டும்.

கடின உழைப்பு மூலம் கிடைக்கும் ரூ.100 கூலியை டாஸ்மாக்கில் குடித்து அழித்து விடுகின்றனர். அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு ரூ.1-க்கு கிலோ அரிசி, ரூ.50-க்கு மளிகைச் சாமான்கள், இலவச டி.வி. என அரசு வழங்கி வருவது மிகவும் கொடுமையாகும்.

தமிழ்நாடு பெயரை ஒட்டி அடைப்புக்குறிக்குள் குடிகாரநாடு என்று இட வேண்டிய நிலைமை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உடலுக்குக் கேடு என்று பாட்டிலில் அச்சிட்டுவிட்டு அரசே குடிக்கச் சொல்வது எவ்விதத்தில் நியாயம்?

1971-ம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி 4 தலைமுறை வீணாகிவிட்டது. இன்னும் 5 ஆண்டுகளில் தமிழகத்தில் குடிக்காத இளைஞர்களே இருக்கமாட்டார்கள் என்ற விவரம் தற்போது ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. இதை அறிந்து பெண்கள் பதறுகின்றனர் என்றார்.

நன்றி: தினமணி

Monday, September 29, 2008

அரசு மதுக்கடையை அரசு மருந்துக்கடையாக மாற்றிய பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர்

புதுச்சேரி மாநிலம், அரியாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய வணிக வளாகத்தில் புதுச்சேரி அரசு நிறுவனம் (PAPSCO) கடந்த ஏழு ஆண்டுகளாக மதுக்கடையை நடத்தி வந்தது.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள அரியாங்குப்பத்தின் மையப்பகுதியில் இந்தக் கடை இயங்கி வந்ததாலும் மலிவு விலையில் அனைத்து மதுவகைகளும் கிடைத்தாலும் சுற்றுப்பகுதியில் உள்ள அனைத்து குடிகாரர்களும் இந்தக்கடைக்கு குவிந்தனர். இதனால் அப்பகுதி மக்களுக்கு நாளுக்கு நாள் தொல்லை அதிகரித்தது.

காதி துணிக்கடைக்கு அருகிலேயே இந்த மதுக்கடையை அரசு நடத்தியது வெட்கக்கேடு! இதனால் இந்த துணிக்கடைக்கு யாரும் வருவதில்லை. மேலும் அருகில் உள்ள பிற வணிக நிறுவனங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டன.

மதுக்கடைகளை தொடங்கிய நாளிலிருந்து பொதுமக்கள் இந்த கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கடந்த முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவரிடம் பொதுமக்களும் அப்பகுதி வியாபாரிகளும் பலமுறை முறையிட்டனர். கள்ளுக்கடை, சாராயக்கடை, பிராந்தி கடை என அனைத்து மதுக்கடைகளையும் அவர் நடத்தி வந்ததால் மக்களின் கோரிக்கையை அவர் பொருட்படுத்தவில்லை

இந்நிலையில் 2006 சட்டமன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் இரா.அனந்தராமன் அவர்களிடம் பொதுக்களும் வியாபாரிகளும் முறையிட்டனர். கோரிக்கையை ஏற்ற சட்டமன்ற உறுப்பினர் ஆறு மாதத்திற்குள் மதுக்கடையை கடையை மூடிவிடுகிறேன் என்று பொதுமக்களுக்கு உறுதியளித்தார்.

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியின்படி அரசு மதுக்கடையை மூடிய சட்டமன்ற உறுப்பினர் அதே இடத்தில் அதே அரசு நிறுவனத்தின் மூலம் மலிவுவிலை மருத்துக்கடையை திறந்துள்ளார்.

மதுக்கடையை மூடிய சட்டமன்ற உறுப்பினரை பாராட்டியதோடு மருந்துக்கடை திறந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தற்போது புதியதாக திறந்துள்ள மருந்துக்கடையில் பொதுமக்கள் வாங்கும் அனைத்து மருந்துகளுக்கும் 5 விழுக்காடு கழிவு உண்டு. மேலும் ரூ.500-க்கு மேல் மருந்து வாங்கும் நோயாளிகளுக்கு ஊழியர்கள் நேரடியாக வீட்டிற்கே வந்து மருந்து வழங்குகின்றனர். பிறருக்கு மதுவை ஊற்றிக்கொடுத்து கூனிக்குருகிய அரசு ஊழியர்கள் தற்போது தன்மானத்தோடு நோயாளிகளுக்கு மருந்து வழங்குகின்றனர்.

இந்நிகழ்வை தமிழ்நாடு அரசு சற்று சிந்தித்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை கிடைக்கும்.

Friday, September 19, 2008

சாதனைகள் அல்ல; வேதனைகள்-மருத்துவர் இராமதாசு

கருணாநிதி, தனது ஆட்சியில் சாதித்துள்ளதாக போடப்பட்டு பத்திரிகைகளில் வெளிவந்துள்ள பட்டியல்கள் சாதனைகள் அல்ல; வேதனைகள் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கூறினார்

மேலும், ரூ. 1 அரிசித் திட்டம், ரூ. 50 மளிகை திட்டம் ஆகியவை மோசடித் திட்டங்கள் என்றும் அவர் கூறினார்

தமிழக அரசின் சாதனைப் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஏற்கெனவே பாதியில் கைவிடப்பட்ட திட்டங்கள், தோல்வி அடைந்த திட்டங்கள் ஆகியவற்றை எல்லாம் போட்டு தமிழக அரசின் சாதனைகள் என்று பட்டியல் வெளியிட்டுள்ளனர்.

குடிசை மாற்று வாரியம் ஆரம்பிக்கப்பட்டு 38 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் சென்னையைக் கூட குடிசை இல்லாத நகரமாக மாற்ற முடியவில்லை.

துப்புரவு தொழிலாளர்களுக்கு மத்திய அரசு அளித்த நிதி ரூ.54 கோடி திருப்பி அனுப்பப்பட்டதாக புதுதில்லியில் இருந்த வந்த அதிகாரி தெரிவிக்கிறார். ஆனால் கருணாநிதி ரூ.42 கோடிதான் செலவு செய்யப்படவில்லை என்கிறார்.

உடல் ஊனமுற்றோருக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு ஆசிரியர்களுக்கு 11 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. இவர்கள் வெளியிட்டுள்ள பட்டியல்கள் சாதனை அல்ல வேதனை.

விலை உயர்வை கட்டுப்படுத்துகிறோம் என்று கூறிக் கொண்டு ரூ.1 விலையில் அரிசி வழங்குவது, ரூ.50-க்கு மளிகை பொருள்கள் வழங்குவது மக்களை ஏமாற்றும் மோசடி திட்டங்கள். ரூ.50-க்கு வழங்கப்படும் மளிகை பொருள்களின் அளவை பார்த்தால் இது புரியும்.

1.84கோடி குடும்ப அட்டைகள் ரூ.1 அரிசி திட்டத்தில் பயன்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த குடும்ப அட்டைகளில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 8.24 கோடியை தாண்டுகிறது. தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 6.24 கோடிதான். மீதமுள்ள 2.25 கோடி பேர் குடும்ப அட்டைகளில் போலியாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள 8000 டாஸ்மார்க் கடைகளை மூடிவிட்டு அனைத்தையும் நியாயவிலைக் கடைகளாக மாற்ற வேண்டும். ஏற்கெனவே உள்ள நியாயவிலைக் கடைகளில் வழக்கமாக வழங்கும் பொருள்களை வழங்க வேண்டும். இந்த புதிய நியாயவிலைக் கடைகளில் மளிகை பொருள்கள், காய்கறிகள் ஆகியவற்றை அரசே விற்பனை செய்ய வேண்டும். இதன் மூலம்தான் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும்.

ஒரிசா உள்ளிட்ட பகுதிகளில் சிறுபான்மையினர் மீது மதவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அன்பை அடிப்படையாக கொண்டது கிறித்துவ மதம். பாதிரியார்கள், சகோதரிகள் மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர். அவர்களைப் போல் சேவை செய்ய வேண்டும் என்று போட்டி போடாமல், அவர்கள் மீது பொறாமை கொண்டு தாக்குதல் நடத்துவது கண்டிக்கத்தக்கது.

இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி யார் எந்த மதத்தை பின்பற்றவும், மதப் பிரசாரம் செய்யவும் அவர்களுக்கு உரிமை உள்ளது. மக்களின் மத உணர்வுகளை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட நினைப்பதையும், சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்துவதையும் நாகரிக சமுதாயம் ஏற்காது என்றார்.

Wednesday, September 17, 2008

செப்டம்பர் 17-வீரவணக்க நாள்


தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தி காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் உயரிழந்தவர்களுக்கு வன்னியர் சங்கம் சார்பில் வீரவணக்க நாள் கடைபிடிக்கப்பட்டது.

1987-ம் ஆண்டு நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தின்போது காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டுக்கு 21 பேர் பலியானார்கள். இவர்களுக்கு ஆண்டுதோறும் செப்டம்பர் 17-ஆம் நாள் வன்னியர் சங்கம் சார்பில் வீரவணக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு திண்டிவனம் வன்னியர் சங்க அலுவலகத்தில் வீரவணக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ச.இராமதாசு, நடுவண் அரசு சுகாதாரத்துறை அமைச்சர் இரா.அன்புமணி, தொடர்வண்டித்துறை இணை அமைச்சர் இரா.வேலு, மாநில வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி செ.குரு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேராசிரியர் கோ.தன்ராசு, அ.கி.மூர்த்தி, மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

வன்னியர் சங்க அலுவலகத்தில் வன்னியர் சங்க கொடி ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்த 21 மாவீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினர். மெழுகு வர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர்.

இடஒதுக்கீட்டு தியாகிகளின் குடும்பங்களுக்கு நிதிஉதவி வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து சித்தனி, பாப்பனப்பட்டு, பனையபுரம் ஆகிய பகுதிகளில் மாவீரர்களுக்கு அமைக்கப்பட்ட நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Monday, September 1, 2008

அரசின் அறிவிப்புகள் மகிழ்ச்சி தரவில்லை: மருத்துவர் இராமதாசு

சென்னை, ஆக. 31: தொழில் நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் 15 ஸ்டாண்டர்டு ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை வாங்குவதற்கு ஏற்ற வகையில் நில உச்ச வரம்பு சட்டத்தை திருத்துவதற்கு பா.ம.க. நிறுவனர் இராமதாசு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்று அறிவிக்கப்பட்ட போதெல்லாம், நில வணிகம் என்ற நோக்கம் தான் பிரதானமாக உள்ளது என்று எடுத்துக்கூறினோம்.

தொழில் நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் ஆகியவையெல்லாம் இனிமேல் 15 ஸ்டாண்டர்டு ஏக்கர் என்ற உச்ச வரம்பிற்கும் அதிகமான அளவில் நிலத்தை வாங்குவதற்கும், வைத்துக்கொள்வதற்கும் அரசிடம் விண்ணப்பம் செய்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம்; அதற்காக நில உச்ச வரம்பு சட்டத்தை திருத்தப் போவதாக தமிழக அரசு சனிக்கிழமை அறிவித்துள்ளது.

இந்த முடிவின் மூலம் நில உச்சவரம்பு சட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே தகர்க்க முற்பட்டிருக்கிறார்கள்.

இந்த அநீதி அனுமதிக்கப்பட்டால், நில வணிகம் இன்னும் கொடிகட்டிப் பறக்கும். தொழில் நிறுவனம், கல்வி நிறுவனம், வணிக நிறுவனம் என்ற பெயரால் யார் வேண்டுமானாலும், எவ்வளவு நிலம் வேண்டுமானாலும் வாங்கி வளைத்துப் போட்டுக்கொள்ள முடியும். இதற்கு ஆட்சியாளர்களின் ஒத்துழைப்பு இருந்தால் போதும்.

வசதியுள்ளவர்களும், கறுப்புப் பணக்காரர்களும் இருக்கின்ற காலி நிலங்களையும், விளை நிலங்களையும் இனி வளைத்துப் போட்டுக் கொள்வார்கள். இதனால், வீடற்றுத் தவிக்கும் உள்ளூர் மக்களுக்கு இனி சொந்த வீடு என்பது வாழ்நாள் முழுவதும் நிறைவேறாத கனவாகவே முடிந்துவிடும்.

வாங்கும் சக்தியை உயர்த்த வேண்டும்: அண்ணாவின் கனவை நிறைவேற்றுகிறோம் என்று சொல்லி ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று அறிவித்திருக்கிறார்கள். இந்தத் திட்டத்தால் ஒரு கோடியே 86 லட்சம் குடும்பங்கள் பயனடைந்து மகிழ்ச்சி அடைவார்கள் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

தி.மு.க.வின் இத்தனை ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகும், தமிழகத்தில் ஒரு கோடியே 86 லட்சம் குடும்பங்கள் கிலோ அரிசியை ரூ. 2-க்கு வாங்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். இதை அறியும் போது இந்த அறிவிப்பால் எப்படி மகிழ்ச்சி கொள்ள முடியும்?

அரிசி விலையைக் குறைப்பதை விட மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்த வேண்டும். அதற்கு எல்லோருக்கும் வேலை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். உழைத்துச் சம்பாதிக்கும் பணம் முழுவதையும் குடும்பத்திற்கே செலவழிக்கும் நிலையை உருவாக்க வேண்டும். அதற்கு மதுக்கடைகளை மூட வேண்டும்.

அண்ணாவின் இந்தக் கனவை நிறைவேற்ற முன்வராமல் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்ற திட்டத்தால் வறுமையை போக்கிவிட முடியாது என்று கூறியுள்ளார் இராமதாசு.
நன்றி: தினமணி

Monday, August 25, 2008

அண்ணா காட்டிய வழியில் ஆட்சி நடத்தி வருகிறோம் என கூறும் கருணாநிதி, தமிழகத்தில் மதுக்கடைகளை மூட மறுக்கிறார்

கிராமங்களில் கள்ளச்சாராயம் விற்பனை பற்றி தகவல் தருவோருக்கு தமிழக அரசு வெகுமதி அளிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கூறினார்.

திருவண்ணாமலையில் பா.ம.க. மகளிர் சங்கம் சார்பில் மது ஒழிப்பு மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டில் மருத்துவர் இராமதாசு பேசியது:

பேரறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது, மதுக்கடைகள் திறக்க மாட்டேன் என்றும் அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு மக்களுக்கு நலத் திட்டங்களை தீட்ட மாட்டேன் என்றும் கூறினார்.

தற்போது, மதுக்கடைகள் மூலம் கிடைக்கும் வருவாயின் மூலம் கலர் டிவி, காஸ் அடுப்பு, இலவச வேட்டி-சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை முதல்வர் கருணாநிதி வழங்கி வருகிறார்.

அண்ணா காட்டிய வழியில் ஆட்சி நடத்தி வருகிறோம் என கூறும் கருணாநிதி, தமிழகத்தில் மதுக்கடைகளை மூட மறுக்கிறார். ஈரோட்டில் கள் இறக்கக் கூடாது என்ற கொள்கைக்காக தனக்குச் சொந்தமான 500 தென்னை மரங்களை பெரியார் வெட்டிச் சாய்த்தார்.

தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒரு சொட்டு கூட இல்லாமல் ஒழிக்க என்னிடம் திட்டம் உள்ளது. அதை தமிழக முதல்வர் கருணாநிதி ஏற்க தயாரா?

கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருள்களை கடத்துவோர் பற்றிய விவரங்கள் குறித்து தகவல் அளிப்போரின் பெயர்களை இரகசியமாக அரசு வைத்திருக்கிறது. மேலும், அவர்களுக்கு தக்க சன்மானமும் அரசு அளிக்கிறது.

அதேபோல், கிராமங்களில் கள்ளச்சாராயம் விற்பனை பற்றி தகவல் தருவோரின் விவரங்களை அரசு இரகசியமாக வைப்பதுடன், அவர்களுக்கு வெகுமதியும் தர வேண்டும் என்றார் இராமதாசு.

Monday, August 18, 2008

விவசாய சங்கங்கள் பலமாக இருக்க வேண்டும்-மருத்துவர் இராமதாசு

பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விவசாயிகளை ஒருங்கிணைத்து மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்றார் பாமக நிறுவனரும், தமிழ்நாடு உழவர் பேரியக்க நிறுவனருமான ச. இராமதாசு.

திருச்சியில் இப் பேரியக்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரும்பு பயிரிடுவோர் கலந்தாய்வுக் கூட்டத்தில் அவர் பேசியது:

"விவசாய சங்கங்கள் பலமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு விவசாயியும் வேளாண்மையில் உள்ள பிரச்னைகளை தெரிந்து கொள்ளும் வகையில், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

அப்போதுதான் நாம் நடத்தும் போராட்டத்துக்கு அவர்களே தங்களது சொந்தச் செலவில் வருவர். எனவே, விவசாயிகளை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் விவசாய சங்கங்கள் ஈடுபட வேண்டும்.
எந்த அரசையும், எந்த ஆட்சியாளரையும் குறை சொல்லவில்லை. ஆனால், குறை சொல்லும் நிலையில் மத்திய அரசு உள்பட எல்லா அரசுகளும், ஆட்சியாளர்களும் உள்ளனர்.

விவசாயிகளின் பிரச்னைகளை நன்கு தெரிந்த, புரிந்த அதிகாரிகள் யாரும் தமிழ்நாட்டில் இல்லை. விவசாயிகளின் பிரச்னைகளான உரத் தட்டுப்பாடு, விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காதது உள்ளிட்டவை பற்றி ஒவ்வொரு அரசும் அறிந்து கொள்வது அவசியம். ஆனால், அவ்வாறு அறிந்து கொள்வதில்லை.

நாம் பலமாக இல்லாததே இதற்குக் காரணம். நாம் பலமாக இருந்தால், அரசும் பயப்படும்.

சொட்டு நீர்ப்பாசனத்துக்கு 50 சத மானியம் வழங்கப்படும் என்பதே ஒரு ஏமாற்று வேலைதான். கருவிகளின் விலையை உயர்த்தி, அது விவசாயிகள் மீதுதான் சுமத்தப்படுகிறது. இதன்மூலம், அரசியல்வாதிகள் பயனடைந்து வருகின்றனர்.

இந்தக் கூட்டத்தைப்போல, சென்னையில் மிகப் பெரிய அளவில் கூட்டம் நடத்த வேண்டும். 2 நாள் கருத்தரங்கம் நடத்த ஏற்பாடு செய்யப்படும். அதற்கு முன்பு, சென்னை தீவுத் திடலில் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். பின்னர், இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டிலோ மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்துவதற்கு நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. அரசியல் கலக்காமல், உழவர்களை ஒன்று திரட்டி இந்தப் போராட்டம் நடத்தப்பட வேண்டும்.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளித்தால் மட்டும் போதாது; ஓரிரு ஆண்டுகளுக்கு உரம், விதை போன்றவற்றையும் இலவசமாக வழங்க வேண்டும்.

வேளாண் துறை அமைச்சரும், அதிகாரிகளும் மாதந்தோறும் விவசாயிகளின் பிரச்னைகள் தொடர்பாக ஆய்வு நடத்த வேண்டும். விவசாய பிரச்னைகளுக்குத் தீர்வு காணாமல் எந்த நாடும் முன்னேற்றம் அடைய முடியாது. எல்லா காலத்திலும் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்வேன்' என்றார் இராமதாசு.

பாமக மாநிலத் தலைவர் கோ.க. மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பேரியக்கப் பொதுச் செயலர் செ. நல்லசாமி வரவேற்றார். தலைவர் இல. சடகோபன் நன்றி கூறினார்.

கருணாநிதியை வரலாறு மன்னிக்காது

மதுக்கடைகளை மூடாவிட்டால், முதல்வர் கருணாநிதியை வரலாறு மன்னிக்காது என பா.ம.க. நிறுவனர் ச. இராமதாசு என திருச்சிராப்பள்ளி மாவட்ட பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் 17.08.2008 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மது ஒழிப்பு மாநாட்டில் குறிப்பிட்டார். மேலும் அவர் கூட்டத்தில் பேசியதாவது,

"மதுவை ஒழிப்பது தொடர்பாக இங்கு நிறைவேற்றப்பட்ட ஒட்டுமொத்தத் தீர்மானம் தமிழக அரசுக்கு எட்ட வேண்டும். அவ்வாறு எட்ட வேண்டுமானால், வீட்டில், தெருவில், ஊரில், குழாயடியில் இதுபற்றி பெண்கள் பேச வேண்டும். அப்போதுதான், ஒவ்வொரு குடும்பத்தையும் சீரழிக்கும் இந்த மதுவை ஒழிக்க முடியும்.

மதுவை ஒழிக்க கடந்த 20 ஆண்டுகளாகப் போராட்டம் நடத்தினாலும், வெற்றி கிட்டவில்லை. அதனால்தான், மகளிரைத் திரட்டி, இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

குடிப் பழக்கம் என்பது ஒரு கொடிய நோய். சமுதாயத்தைப் பாதிக்கும், வீட்டைக் கெடுக்கும் இந்த நோயை ஒழிக்க வேண்டும்.

மலேரியா, காசநோய் உள்ளிட்ட நோய்களை ஒழிக்க இந்த அரசு நடவடிக்கை எடுத்து, செலவு செய்தாலும், ஒரு புதிய கொடிய நோயையும் உற்பத்தி செய்கிறது. அதனால், மரணம் ஏற்படுகிறது.

அதனால்தான், அரசு நடத்தும் மது வியாபாரத்தை மரண வியாபாரம் என்கிறோம். எனவே, மக்கள் நலன் காக்கும் இந்த அரசு, மது வியாபாரத்தைத் தவிர்க்க வேண்டும்.

திருப்பத்தூர் அருகேயுள்ள மாடப்பள்ளி கிராமத்தில் உள்ள 500 குடும்பங்களில் 180 குடும்பங்களில் பெண்கள் விதவைகளாக உள்ளனர். "குடி'யால் கணவர்கள் உயிரிழந்ததே இதற்குக் காரணம்.

மது வியாபாரத்தில் அரசு இலக்கு வைத்து விற்பனை செய்கிறது. ஊற்றிக் கொடுக்கும் வேலைக்கு பட்டதாரிகளை நியமித்துள்ளது கொடுமையானது.

வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு, மின் உற்பத்தி, குடிநீர் போன்றவற்றுக்குத்தான் இலக்கு நிர்ணயிக்க வேண்டும். ஆனால், இந்த அரசு "குடி'க்கு இலக்கு வைத்து, விற்பனை செய்கிறது.

மதுவை ஒழிக்க வேண்டும் என உலக சுகாதாரப் பேரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தவிர, பெரியார், ராஜாஜி, அண்ணா, ஓமந்தூரார் உள்பட பலர் மது ஒழிப்புக்குப் பாடுபட்டனர். ஆனால், யார் சொல்லியும் நான்கைந்து தலைமுறைகளாகக் கேட்கவில்லை.

குடிப் பழக்கத்திலிருந்து இளைஞர்களைக் காக்க இந்த அரசு என்ன திட்டம் வைத்துள்ளது? கடும் சட்டம் கொண்டு வந்து மதுக் கடை இல்லா சமுதாயத்தை நாம் உருவாக்குவோம். இதற்கான ஆலோசனையும், ஒத்துழைப்பும் நாங்கள் அளிக்கிறோம். தமிழறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் இதற்கு ஆதரவு அளிக்கத் தயாராக உள்ளனர். எனவே மதுக் கடைகளை மூடாவிட்டால் கருணாநிதியை வரலாறு மன்னிக்காது.

இளைய சமுதாயத்தினர் மதுவால் சீரழிந்து வருவதாக இங்கு பேசிய மகளிர் குறிப்பிட்டனர். இந்தக் குரலுக்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டும்.

எனவே, உரிய நடவடிக்கை எடுத்து, மதுக் கடைகளை மூடினால் மட்டுமே கருணாநிதியை வரலாறு மன்னிக்கும் என்றார் இராமதாசு.
நன்றி தினமணி

Thursday, August 14, 2008

ஒரு அரசின் வலிமை, மக்களின் அறியாமையில் அடங்கியிருக்கிறது

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். இரண்டாம் கட்ட கவுன்சலிங் அட்டவணை திட்டமிட்டு மாற்றப்பட்டுள்ளது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.


எம்.பி.பி.எஸ். 2-ம் கட்ட கவுன்சலிங்கை தாமதமாக நடத்தி, செட்டிநாடு மருத்துவக் கல்லூரியின் 97 இடங்கள் பறிபோனது குறித்து தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
""மருத்துவப் படிப்புக்கான மாணவர் கவுன்சலிங்கில் எந்தவிதத் காலதாமதமும் இல்லை; கடந்த காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட கால அட்டவணையின்படிதான் இந்த ஆண்டு கவுன்சலிங் நடைபெறுகிறது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.


ஒரு அரசின் வலிமை, மக்களின் அறியாமையில் அடங்கியிருக்கிறது என்பதை என்றைக்கோ சொல்லி வைத்ததை இன்றைக்கும் தி.மு.க. அரசு நம்பிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதைத்தான் இது காண்பிக்கிறது.


கடந்த ஆண்டு முதல் கட்ட கவுன்சலிங்கிலேயே (ஜூலை 9, 2007 முதல் ஜூலை 16, 2007 வரை முதல் கட்ட கவுன்சலிங் நடைபெற்றது.) சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்கள், அரசு பிடிஎஸ் இடங்கள் நிரப்பப்பட்டன; கடந்த ஆண்டு மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட அட்டவணையிலும் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆனால், இந்த ஆண்டு கவுன்சலிங் அட்டவணை திட்டமிட்டு மாற்றப்பட்டுள்ளது. ஜூலை 4, 2008 முதல் ஜூலை 8, 2008 வரை முதல் கட்ட கவுன்சலிங் நடந்தது; இரண்டாம் கட்ட எம்.பி.பி.எஸ். கவுன்சலிங் ஆகஸ்ட் 11 முதல் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப் போன்று சுய நிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், இந்த ஆண்டு முதல் கட்ட கவுன்சலிங்கில் நிரப்பப்படவில்லை.


இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். இரண்டாம் கட்ட கவுன்சலிங் உடனடியாகத் தொடங்கப்படாமல், 34 நாள்கள் இடைவெளி விட்டு ஆகஸ்ட் 11-ம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கால தாமதத்தை செட்டிநாடு மருத்துவக் கல்லூரி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, ""நிகர்நிலைப் பல்கலைக்கழகம்'' என்ற தகுதியைப் பெற்றுவிட்டது.

இதனால் செட்டிநாடு மருத்துவக் கல்லூரியிலிருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு ஒரு இடம்கூட கிடைக்காமல் போய்விட்டது. கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் வரை செட்டிநாடு மருத்துவக் கல்லூரி சென்று, அரசு ஒதுக்கீட்டுக்கு இடம் அளிக்கத் தேவையில்லை என தடையாணை பெற்ற வரலாறு இருக்கிறது.


அந்த அனுபவத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு முதல் கட்ட கவுன்சலிங்கின்போதே, சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்பியிருந்தால் செட்டிநாடு மருத்துவக் கல்லூரியிடமிருந்தும் 97 இடங்கள் கிடைத்திருக்கும். இட ஒதுக்கீட்டுச் சலுகையின்படி சமுதாயத்தின் நலிவடைந்த பிரிவினருக்குக் கிடைத்திருக்க வேண்டிய 70 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களும் பறிபோயிருக்காது.


எனவே ""இந்திய மருத்துவக் கவுன்சில் நிர்ணயம் செய்து அறிவித்த கால அவகாசத்துக்குள் கவுன்சலிங் நடத்தப்படுகிறது; எம்.பி.பி.எஸ். 2-ம் கட்ட கவுன்சலிங் நடத்துவதில் கால தாமதம் எதுவும் இல்லை'' என்று பிரச்னையை திசை திருப்பாமல், இதற்குப் பொறுப்பானவர்கள் யார் எனக் கண்டறிய முழுமையான விசாரணையை நடத்த தமிழக அரசு முன் வர வேண்டும்' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.


நன்றி: தினமணி, 14.08.2008

Friday, August 8, 2008

சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கீட்டை மேற்கொள்ள வேண்டும்-பா.ம.க. தலைவர் கோ.க.மணி

சமூகநீதி அனைவரையும் சென்றடைய தொகுப்பு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் கோ.க.மணி, புதிய யோசனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருநெல்வேலியில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:
தமிழ்நாட்டில ஒவ்வொரு குடும்பத்தையும் சமூக நீதி சென்றடைய வேண்டுமானால் தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைவருக்கும் உரிய பங்கீடு கிடைக்க வேண்டும். அதற்கு தொகுப்பு இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டும்.

அதாவது, தற்போது ஒவ்வொரு பிரிவினருக்கும் உள்ள இட ஒதுக்கீட்டை பிரித்து அதில் உள்ள சாதிகளுக்கு அவர்களின் மக்கள் தொகை அடிப்படையில் பங்கிட்டு இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.

இதற்காக சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கீட்டை மேற்கொள்ள வேண்டும். இதே ஒதுக்கீட்டு முறையை பதவி உயர்வுகளுக்கும் வழங்க வேண்டும். தற்போது இந்த முறை கர்நாடகம், ஆந்திரம், கேரளம் ஆகிய மாநிலங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இட ஒதுக்கீட்டில் "கிரீமிலேயர்' முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்றார்.
நன்றி தினமணி, 08.08.2008

கருணாநிதி ஆட்சி காலத்தில் மூன்று மாநிலங்களில் தமிழகத்தின் உரிமையை இழந்து நிற்கிறோம்

தமிழக முதல்வர் கருணாநிதி உச்சநீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாகியிருப்பது அரசு நிர்வாகத்தின் தோல்வியை காட்டுகிறது. இத் தீர்ப்பு தமிழகத்துக்கு அவமானம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
இது குறித்து தைலாபுரத்தில் அவர் வியாழக்கிழமை நிருபர்களிடம் கூறியது:

"நீங்கள் எப்படி பட்டவர்? உங்கள் நடவடிக்கை வெறுத்து ஒதுக்கத்தக்கது' என்று முதல்வர் கருணாநிதிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அகர்வால், சிங்வி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இக் கண்டனம் தமிழகத்துக்கு, ஏற்பட்ட மிகப்பெரிய தலைக்குனிவு. உச்சநீதிமன்றத்தின் கட்டளையை ஏற்று சரியாக பதில் மனு தாக்கல் செய்யாதது, அரசு நிர்வாகத்தின் தோல்வியை காட்டுகிறது.
இதில் இரு வழக்கறிஞர்கள் பலிகடா ஆக்கப்பட்டுள்ளனர்.

தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் ஒருநபர் கமிஷன் மூலம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஜூலை 14-ம் தேதி அறிக்கை கொடுக்கப்பட்டு ஜூலை 17-ம் தேதி சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் காட்டிய வேகத்தை, உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்வதில் காட்டாமல் அரசு நிர்வாகம் கோட்டைவிட்டு விட்டது.

தூத்துக்குடியை மாநகராட்சியாக மாற்றுவதற்கு ஒரு கோடிக்கு செலவு செய்து மதுரை மக்கள் முகம் சுளிக்கும் அளவுக்கும் விழா எடுத்துள்ளனர். இந்த ஆடம்பரத்தை முதல்வரும் அங்கீகரித்துள்ளார்.

சினிமாவில் ஆர்வம்
தமிழக முதல்வர் கருணாநிதி இந்த இரண்டரை ஆண்டுகளில் சினிமாவை கண்டு களிப்பது, சினிமா பிரமுகர்களைச் சந்திப்பது, அது தொடர்பான விழாவில் பங்கேற்பது என்பதிலேயே அதிக கவனம் செலுத்தியுள்ளார்.

வேலைவாய்ப்பு குறித்து வெள்ளை அறிக்கை
கடந்த இரண்டரை ஆண்டுகளில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதாக கூறிக் கொண்டு 29 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. தற்போது வெளியிடப்பட்டுள்ள தகவல் தொழில் நுட்ப கொள்கையின் மூலம் 30 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று கூறியுள்ளனர்.

தமிழகத்தில் வேலைக்கு பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 50 லட்சம்தான். இதுபோல் வேலைகிடைத்தால் இரண்டரை ஆண்டுகளில் வேலையில்லாதோர் யாரும் தமிழகத்தில் இருக்க மாட்டார்கள். இதுவரை போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் எவ்வளவு பேருக்கு வேலை கிடைத்துள்ளது என்பது குறித்து ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

மைசூர், பெங்களூரில் சர்வே
கர்நாடக முதல்வர் எடியூரப்பா மீண்டும் சர்வே செய்து ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றலாம் என்று கூறியுள்ளார். மைசூர், பெங்களூர், கோலார் ஆகிய பகுதிகளையும் சேர்த்து மீண்டும் சர்வே செய்யலாம். அங்கெல்லாம் 60 முதல் 70 விழுக்காடுவரை தமிழர்கள் வசிக்கின்றனர். கருணாநிதி ஆட்சி காலத்தில் மூன்று மாநிலங்களில் தமிழகத்தின் உரிமையை இழந்து நிற்கிறோம். இதற்கு கருணாநிதி செய்யும் சமரச அரசியலே காரணம்.

ஒகேனக்கல் திட்டத்துக்கு ஜப்பானின் நிதியுதவியை எதிர்பார்க்காமல் ஒப்பந்தம் போடப்பட்டவுடன் நிறைவேற்றியிருந்தால் இப் பிரச்னை ஏற்பட்டிருக்காது. மது விற்பனையில் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி லாபம் கிடைக்கிறது. அதில் தருமபுரி மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.
இங்குள்ள மக்களின் குடிநீர்ப் பிரச்னையை தீர்க்க ஜப்பான் நிதி உதவியைத்தான் எதிர்பார்க்க வேண்டுமா? என்றார் ராமதாஸ்.
நன்றி: தினமணி, 08.08.2008

Thursday, August 7, 2008

தமிழகத்தில் மாற்றத்துக்கு வழி என்ன?-மருத்துவர் இராமதாசு

தமிழகத்தில் மாற்றத்துக்கு, மாற்று வழி என்ன என்பது குறித்து ஒரே கருத்துள்ள தலைவர்கள் வழிகாட்ட வேண் டும் என்று பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்தார்.

நாத்திகம் இதழின் 50-வது ஆண்டு விழாவில் அவர் பேசிய தாவது: நமது மண், ஆறுகள், குளங்கள், மொழி, பண்பாடு ஆகியவற்றை இழந்து வருகிறோம். நமது இளைஞர்கள் மது, திரைப்படங்க ளால் சீரழிந்து வருகின்றனர்.

இதை எடுத்துச் சொல்லக் கூடிய நிலையில் நாமும் இல்லை. அதை புரிந்து கொள்ளும் நிலையில் அவர்களும் இல்லை.

இதை மாற்றவில்லையெனில், நமது முன்னோர்கள், தலைவர்கள் பாடுபட்டதெல்லாம் வீணாகப் போய்விடும். இல்லையெனில், தமிழர்களுக்கு விமோசனமே இல்லை. தமிழகத்தில் 4 தலைமு றைக்கு இளைஞர்கள் பலர் குடிப் பழக்கத்துக்கு ஆளாகிவிட்டனர்.

இன்னும் ஐந்து ஆண்டுகளில் தமி ழகத்தில் மது குடிக்காத இளைஞர்களே இருக்கமாட்டார்கள் என்று ஓர் ஆய்வு தெரி விக்கிறது.

தமிழகத்தில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது வறட்டுக் கூச்சலாகத்தான் உள்ளது. சிற்றூர்களில் கூட பள்ளிகளில் ஆங்கில கல்வி முறை உள்ளது.

அறிவார்ந்த இளைய சமுதாயத்தை உருவாக்க வேண்டுமெ னில், தமிழ்வழியில் தரமான, கட்டாய, சமச்சீரான கல்வியை இளைய தலைமுறையினருக்கு வழங்க வேண்டும். தமிழகத்தில் சென்னை முதல் கடலூர் வரை நிலங்களை பிற மாநிலத்தவர் வாங் கிக் குவிக்கின்றனர். இந்த மனை விற்பனை தமிழகம் முழுவதும் இனி தொடரும்.

நமது மண், மொழியை மட்டு மன்றி மீனவர்களின் உயிரைக் கூடக் காப்பாற்ற முடியவில்லை. இதற்காக வெட்கப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.

இதையெல்லாம் மாற்றுவதற்கு வேறு என்ன வழி என்று தலைவர் கள் சிந்திக்க வேண்டும். இதற் கான மாற்று வழியை தலைவர் கள் கூறினால் அதை பின்பற்ற லாம்.

ஒரு காலத்தில் மத்தியில் கூட் டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று பேசிப் பேசி அவர்களின் தொண் டை கூட வறண்டுவிட்டது.
இதற்காகப் போடாத மாநாடுகள் இல்லை.


ஆனால், இன்று ஒரு பள் ளியோ அல்லது மருத்துவமனை யைத் தொடங்க வேண்டும் என் றால் கூட தில்லிக்கு தான் கோப்பு களைக் கொண்டு செல்ல வேண் டிய நிலை உள்ளது. மாநில சுயாட்சி அந்த அளவுக்கு உள் ளது. இதை யோசிக்க வேண்டும்.

எனவே, இதற்கு மாற்று வழி என்ன என்பது குறித்து ஒரே கருத் துள்ள தலைவர்கள் கூடிப் பேசி வழிகாட்ட வேண்டும் என்றார் ராமதாஸ்.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட் சியின் மூத்த தலைவர் ஆர். நல்லக் கண்ணு, தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன், நாத்திகம் இதழின் நிறுவனர் நாத் திகம் ராமசாமி, தமிழருவி மணியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர்.
நன்றி: தினமணி

Tuesday, July 29, 2008

தமிழக மீனவர்களைக் காக்க முதல்வர் கருணாநிதி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை-பா.ம.க. நிறுவுனர் இராமதாசு

இலங்கைக் கடற்படை தாக்குதலில்இருந்து தமிழக மீனவர்களைக் காக்க முதல்வர் கருணாநிதி தவறிவிட்டார் என்று பா.ம.க. நிறுவனத் தலைவர் இராமதாசு குற்றம்சாட்டினார்.

விலை உயர்வைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மத்திய அரசை வலியுறுத்தினார்.

பிரதமர் மன்மோகன் சிங்கை தில்லியில் திங்கள்கிழமை சந்தித்தப் பின் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். மிக விரைவாகவும் அவசரமாகவும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை இது என்றும் அவர் கூறினார்.

விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறினால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இதுவரை நிறைவேற்றிய மக்கள் நலத் திட்டங்களால் பயனில்லாமல் போய்விடும் என்றும் அவர் எச்சரித்தார்.

பணவீக்கம் மற்றும் விலை உயர்வைக் கட்டுப்படுத்த 14 அம்ச திட்டத்தை அவர் வெளியிட்டார். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மனு ஒன்றையும் அவர் அளித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய திட்டங்களை நிறைவேற்றும்போது பிடிவாதம் கூடாது என்றும் அவர் கூறினார். இதற்கு அவர் நேரடியாக விளக்கம் அளிக்காவிட்டாலும் சேது திட்டத்தை நிறைவேற்றுவதில் தி.மு.க.வின் நிலையைத்தான் அவர் இவ்வாறு மறைமுகமாக குறை கூறியதாகத் தெரிகிறது.

விரைவில் தேர்தலைச் சந்திக்க உள்ள நிலையில் சாமானிய மக்கள் பயனடையும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதை மத்திய அரசுக்கு நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை என்றார் அவர்.

விவசாயிகளின் பரிதாப நிலை குறித்தும் இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும் பிரதமர் மன்மோகனிடம் இராமதாசு எடுத்துரைத்தார்.

நிதியமைச்சர் சிதம்பரம், வேளாண் அமைச்சர் சரத் பவார் ஆகிய இருவரும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து விவசாயிகளைச் சந்தித்து அவர்களின் பிரச்னைகளைக் கேட்டு, அவற்றைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இராமதாசு கேட்டுக்கொண்டார்.

பிரதமர் மன்மோகன் சிங்கும் பல்வேறு மாநிலங்களில் சுற்றுப் பயணம் செய்து விவசாயிகளின் பிரச்னைகளைத் தெரிந்து அவற்றுக்குத் தீர்வு காண வேண்டும் என்றார் அவர்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவது தொடர்கதையாகி வருகிறது. இதைத் தடுக்க, சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கை செல்லும் பிரதமர், மீனவர் மீதான தாக்குதலை நிறுத்துமாறு அந் நாட்டு தலைவர்களிடம் கண்டிப்புடன் கூற வேண்டும் என்றார் அவர்.

மீனவர் பிரச்னை குறித்து பிரதமரிடம் முறையிட்டபோது, மீனவர்களுக்கு லைசென்ஸ் வழங்கலாம் என்று பிரதமர் யோசனை கூறியதாக இராமதாசு தெரிவித்தார்.

தமிழக மீனவர்களைக் காக்க முதல்வர் கருணாநிதி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.

அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக - அதிமுக இல்லாத புதிய அணி உருவாக்கப்பட வேண்டும். அந்த அணி காங்கிரஸ் தலைமையில் செயல்பட வேண்டும் என்று பாமக நிறுவனத் தலைவர் எஸ். ராமதாஸ் கூறினார்.
அப்படிப்பட்ட அணி உருவானால் அதற்கு மக்கள் அமோக ஆதரவு அளிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும்போது அவர் இவ்வாறு கூறினார்.
திமுக - அதிமுக இல்லாத அணி காங்கிரஸ் தலைமையில் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் எமது கட்சி மிகவும் முனைப்பாக உள்ளது. அதில் பாமகவும் இடம் பெறும் என்றார் அவர்.

இரு கட்சிகளுக்கு இடையே கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து பாமகவுடனான உறவை திமுக அண்மையில் துண்டித்துக் கொண்டது.

Friday, July 25, 2008

பாமகவைப் பழிவாங்க ஆள்தூக்கிச் சட்டங்களை ஏவி விடுகின்றனர்-மருத்துவர் இராமதாசு

தைலாபுரத்தில் மருத்துவர் இராமதாசு அவர்கள் வியாழக்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

விவசாயிகளுக்கு முறையாக மின்சாரம் கிடைக்கவில்லை. பள்ளி, கல்லூரி மாணவர்களும் மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக ஆட்சியில் மின் உற்பத்தியைப் பெருக்க எந்த திட்டமும் செயல்படுத்தாததே இதற்குக் காரணம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.


2006-ம் ஆண்டில் மின்உற்பத்தி மாநிலத்தின் தேவையைவிட அதிகமாக இருந்தது.

2004-ம் ஆண்டில் மின் உற்பத்தி 8690 மெகாவாட். மின்சாரத்தின் பயன்பாடு 5909 மெகாவாட் மட்டுமே.
மின் பயன்பாடு 2005-ல் 6500 மெகாவாட்டாகவும், 2006-ல் 7124 மெகாவாட்டாகவும், 2007-ல் 8600 மெகாவாட்டாகவும் அதிகரித்தது. 2008-ல் 9121 மெகாவாட் தேவைப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த இரண்டரை ஆண்டில் பெருகி வரும் மின்தேவைக்கு ஏற்ப மின் உற்பத்தியை பெருக்க திமுக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதில் திமுக அரசு படுதோல்வி அடைந்துவிட்டது.


இரண்டரை ஆண்டில் புதிய தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்த அறிவிப்புகள் வந்தன. புதிய தொழில்களின் ஒப்பந்தங்களுக்கு ஏற்ப மின் உற்பத்தியை பெருக்கவில்லை.


மதுவிலக்குக்கு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாகத் தெரிகிறது. மது விற்பனையை பெருக்குவதில் காட்டும் ஆர்வத்தை விட்டுவிட்டு மின்உற்பத்தியை பெருக்குவதில் தமிழக அரசு ஆர்வம் காட்ட வேண்டும்.

மின்தடையைக் கண்டித்து ஜூலை 28 முதல் 30 வரை தமிழகம் முழுவதும் பாமக சார்பில் மாவட்ட, வட்ட தலைமையிடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

வீட்டு மனைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தாம்பரம் முடிச்சூரில் 45 வீட்டு மனைகளை விற்பனை செய்ய வீட்டுவசதி வாரியம் வெளியிட்ட அறிவிப்புக்குப் பின் ஒரு லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந் நிலையில் சென்னையில் டாடா நிறுவனத்துக்கு 25 ஏக்கர் நிலத்தையும், டி.எல்.எப். நிறுவனத்துக்கு 25 ஏக்கர் நிலத்தையும் அரசு தாரை வார்த்துள்ளது.
இந்த நிலங்கள் விற்கப்படவில்லை. 99 ஆண்டுகளுக்கு குத்தகை விடப்பட்டுள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
99 ஆண்டுகளுக்கு குத்தகை விடுவது என்பது விற்பதற்கு சமம்.

மணல் கொள்ளை, கல்விக் கட்டணக் கொள்ளை ஆகியவற்றை தடுத்து நிறுத்த பாமக தொடர்ந்து போராடி வந்தது. இதனால் பாமகவைப் பழிவாங்க ஆள்தூக்கிச் சட்டங்களை ஏவி விடுகின்றனர்.

அரசியல் கட்சிகளின் போராட்டத்தின்போது அசம்பாவிதங்கள் நடந்தால் அதற்கு அக் கட்சிகளே பொறுப்பேற்று நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று 1992-ம் ஆண்டு அப்போது அதிமுக அரசு சட்டம் கொண்டு வந்தது.

இதில் விஷமிகள் பிரச்னை செய்தால் அரசியல் கட்சிகள் மீது பழி விழும் என்று திமுக அதை எதிர்த்தது. அவர்களுடன் சேர்ந்து நாங்களும் எதிர்த்தோம்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக ஒரு மசோதாவும் தாக்கல் செய்தது. ஆனால் தற்போது போராட்டம் நடத்துபவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை பாய்ச்சுவது முதல்வரின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைய வேண்டும். இதுவே பொதுமக்கள் விருப்பமும், பாமகவின் விருப்பமும்.

கம்யூனிஸ்ட்டுகள் 3-வது அணியுடன் கைகோர்த்துள்ளனர். கம்யூனிஸ்டுகள் குறித்த திட்டவட்டமான அறிவிப்பை திமுக இதுவரை வெளியிடவில்லை. இது திமுக 3-வது அணிக்கான கதவை திறந்து வைத்துள்ளதையே காட்டுகிறது.

சோம்நாத் சாட்டர்ஜி கட்சியில் இருந்து நீக்கப்பட்டது மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் உள்கட்சி விவகாரம். நாடாளுமன்றத்தில் கட்சிக் கொறடாவின் உத்தரவை மீறி சிலர் வாக்களித்திருந்தால் அவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுக்கலாம். கட்சிக்கு கட்டுபாடு முக்கியம்.

ஒரு கட்சியின் எம்.பி.யோ, எம்எல்ஏவோ மக்கள் பணிகளில் கவனம் செலுத்தவில்லை எனில் அக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களில் இரு பங்கு ஆதரவு இருந்தால் அவர்களைத் திரும்ப அழைக்கும் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று நாங்கள் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

தமிழக முதல்வர் கருணாநிதியை எம்.கே. என்று பலர் அழைப்பர். அவர் ஆட்சியில் எம்.ஓ.யூ. ஒப்பந்தம் கையெழுத்திடுவதுதான் தொடர்ந்து நடந்து வருகிறது. அவரை இனிமேல் எம்.ஓ.யூ. கருணாநிதி என்றே அழைக்கலாம் என்றார் ராமதாஸ்.

Thursday, July 24, 2008

தமிழ் ஓசை நாளிதழுக்கு அரசு விளம்பரம் இரத்து

பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு நாளிதழான தமிழ் ஓசைக்கு பாமக-திமுக உறவில் விரிசல் ஏற்பட்டதையடுத்து அரசு விளம்பரம் இரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பா.ம.க. தலைவர் கோ.க. மணி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Friday, July 18, 2008

கச்சத்தீவு: உருப்படியான பயனுள்ள நடவடிக்கை எதையும் முதல்வர் செய்யவில்லை-மருத்துவர் இராமதாசு

கச்சத்தீவு பிரச்னையைத் தீர்க்கும் அதிகார வாய்ப்புகள் இருந்த காலத்தில் அதைச் செய்யாமல் இப்போது உண்ணாவிரதம் என்ற நாடகத்தை முதல்வர் கருணாநிதி நடத்தி யாரை ஏமாற்றப் பார்க்கிறார் என்று பா.ம.க. நிறுவனர் இராமதாசு கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
1974-ல் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்த்துக் கொடுத்த ஒப்பந்தம்தான் இப்போதைய கொடுமைகளுக்கு முதற்காரணம். அப்போது கருணாநிதி தலைமையிலான தி.மு.க.தான் ஆட்சியில் இருந்தது.
அதன்பிறகு மூன்று முறை முதல்வராகப் பொறுப்பு வகித்த நேரங்களில், தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி உரிமைகளைப் பெற்றுத் தர எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை.
மத்திய ஆட்சியில் பங்கு வகித்த முக்கிய கட்சியாக இருந்தபோதிலும் அந்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
அப்போதெல்லாம் சும்மா இருந்துவிட்டு, இப்போது தும்பைவிட்டு வாலைப் பிடிக்கும் கதையாக உண்ணாவிரதம் என்று நாடகம் ஆடுவது யாரை ஏமாற்றுவதற்காக?
உண்ணாவிரதம் இருப்பது தவறல்ல. ஆனால், மீனவர் பிரச்னைக்கு தில்லியில்தான் உண்ணாவிரதம் இருக்க வேண்டுமே தவிர, தமிழகத்தில் அல்ல.
தில்லிக்குச் சென்று தங்கி இருந்து வாதாட வேண்டும். கடலில் இந்திய மீனவரின் உயிருக்கு இலங்கை கடற்படையால் ஊறு நேர்ந்தால் இந்திய அரசு வேடிக்கை பார்க்காது என்று எச்சரிக்குமாறு வற்புறுத்த வேண்டும்.
இந்த உத்தரவாதம் கிடைக்கும் வரை சென்னை திரும்ப மாட்டேன் என்று அங்கேயே இருந்து சாதித்துக் காட்ட வேண்டும்.
இதற்கு மாறாக இங்கே உண்ணாவிரதம் என நாடகமாடுவது மீனவர்களை ஏமாற்ற மேற்கொள்ளும் முயற்சி.
ஆட்சியில் இருந்தபோது சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது, சுதந்திர நாளில் கோட்டையில் கொடி ஏற்றி வீர முழக்கம் செய்தது, பிரதமர்களுக்கு அவ்வப்போது கடிதங்கள் எழுதியது ஆகியவற்றைத் தவிர உருப்படியான பயனுள்ள நடவடிக்கை எதையும் முதல்வர் செய்யவில்லை.
ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசியல் எதிரிகள், வேண்டாதவர்கள் என கருதப்படும் அதிகாரிகளையும் பழி வாங்குவதில் காட்டும் வேகத்தில் நூறில் ஒரு பங்கு வேகத்தையாவது, கோபத்தையாவது கச்சத்தீவுப் பிரச்னையில் காட்டி செயல்பட்டிருந்தால் இப்பிரச்னைக்கு எப்போதோ தீர்வு ஏற் பட்டிருக்கும் என இராமதாசு கூறியுள்ளார்.
நன்றி: தினமணி

இந்தியாவில் மருத்துவம் முடிக்கும் 70 சதவீதத்தினர் அமெரிக்கா செல்வது கவலை அளிக்கிறது-நடுவண் அமைச்சர் அன்புமணி

சண்டீகர் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பேசிய நடுவண் அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி பேசியது:

தாய் நாட்டிலேயே ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. 2.50 லட்சம் வெளிநாட்டு நோயாளிகள் இந்தியாவில் மருத்துவம் பெற வருகின்றனர். மருத்துவத் துறை தற்போது சிறந்து விளங்கி வருகிறது.

அதனால், வெளிநாட்டுப் பணியை மருத்துவர்கள் தேட வேண்டாம். தாய் நாட்டிலேயே சேவை செய்திட அர்ப்பணியுங்கள். இந்தியாவில் மருத்துவம் முடிக்கும் 70 சதவீதத்தினர் அமெரிக்கா செல்வது கவலை அளிக்கிறது என்றார்.

நன்றி: தினமணி