Wednesday, September 17, 2008

செப்டம்பர் 17-வீரவணக்க நாள்


தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தி காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் உயரிழந்தவர்களுக்கு வன்னியர் சங்கம் சார்பில் வீரவணக்க நாள் கடைபிடிக்கப்பட்டது.

1987-ம் ஆண்டு நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தின்போது காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டுக்கு 21 பேர் பலியானார்கள். இவர்களுக்கு ஆண்டுதோறும் செப்டம்பர் 17-ஆம் நாள் வன்னியர் சங்கம் சார்பில் வீரவணக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு திண்டிவனம் வன்னியர் சங்க அலுவலகத்தில் வீரவணக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ச.இராமதாசு, நடுவண் அரசு சுகாதாரத்துறை அமைச்சர் இரா.அன்புமணி, தொடர்வண்டித்துறை இணை அமைச்சர் இரா.வேலு, மாநில வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி செ.குரு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேராசிரியர் கோ.தன்ராசு, அ.கி.மூர்த்தி, மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

வன்னியர் சங்க அலுவலகத்தில் வன்னியர் சங்க கொடி ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்த 21 மாவீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினர். மெழுகு வர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர்.

இடஒதுக்கீட்டு தியாகிகளின் குடும்பங்களுக்கு நிதிஉதவி வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து சித்தனி, பாப்பனப்பட்டு, பனையபுரம் ஆகிய பகுதிகளில் மாவீரர்களுக்கு அமைக்கப்பட்ட நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

No comments: