Monday, March 2, 2009

வன்னியில் 1987ல் செய்ததுபோல வானூர்தி மூலம் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை இந்தியா போட வேண்டும்: ராமதாஸ்

போர் நிறுத்தம் கிடையாது என்று அறிவித்திருக்கும் இலங்கை அரசுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அரசு 1987ஆம் ஆண்டு செய்ததைப் போன்று வானூர்தி மூலம் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை இந்தியா போட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது,

போர் நிறுத்தம் கிடையாது என்று அறிவித்திருக்கும் இலங்கை அரசுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அரசு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

போர் முனையில் சிக்கியுள்ள தமிழ் மக்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த இடத்தில்தான் அவர்கள் வசிக்கிறார்கள். இந்த உண்மையை மறைத்துவிட்டு, கொடூரத் தாக்குதல் மூலம் தமிழர்களை வெளியேற்றத்துடிக்கும் இலங்கை அரசின் வலையில் இந்தியா சிக்கி விடக் கூடாது.

போர் முனையில் சிக்கியுள்ள தமிழ் மக்களை காப்பாற்ற முன்வந்தால், அவர்களை சொந்த பகுதியில் இருந்து வெளியேற்ற முயற்சிக்கக் கூடாது. 1987ஆம் ஆண்டு செய்ததைப் போன்று வானூர்தி மூலம் உணவு மற்றும் மருத்துப் பொருட்களை இந்தியா போட வேண்டும்.

உலக நாடுகளைப் போல இந்தியாவும், இலங்கை அரசுடனான பொருளாதார உதவிகள் மற்றும் கடன் உதவித்திட்டங்களை கைவிட வேண்டும். இலங்கையுடனான விளையாட்டு உறவுகளை இந்தியா முறித்துக்கொள்ள வேண்டும்.

இதுபோன்ற தீவிர நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டால் மட்டுமே தமிழ் மக்களின் துயர் துடைத்து, அவர்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண முடியும் என்று கூறியுள்ளார்.

நன்றி: தமிழ்வின்.காம்

No comments: